இனி 5 பேருக்கு மேல் ஒரு செய்தியை பகிர முடியாது.. பேஸ்புக் நிறுவனம் அதிரடி!

Published by
Surya

மெசஞ்சர் செயலியில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்த செயலி மூலம் தொடர்ந்து தவறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துகொண்டே வந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொதுத் தேர்தல்களை நடத்தத் தயாராகி வருவதால், தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் அதிகளவில் பரவும் நிலையில், இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், வாட்ஸ்அப் செயலியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றே, பேஸ்புக் மெசஞ்சரிலும் அறிமுகப்படுத்த போவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது. அது, ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என தெரிவித்தது.

இந்த புதிய வசதி, கொரோனா பற்றிய தவறான தகவல் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதாகவும், வாட்ஸ் ஆப் செயலியில் விதிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை பயனர்களிடமிருந்து பெரியளவில் எதிர்ப்புகளை பெறவில்லை. இந்த நிலையில், இந்த புதிய விதிகளை பேஸ்புக் நிறுவனம், தனது மற்ற செயலிகளிலும் அமல்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியானது.

Published by
Surya

Recent Posts

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…

22 seconds ago

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் உறுப்பினர்கள்…

35 minutes ago

9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…

49 minutes ago

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சட்டப்பேரவையில் பாராட்டி மகிழ்ந்த முதலமைச்சர்!

சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…

2 hours ago

30 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் கிடையாது! ஆனால்?! – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…

3 hours ago

விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…

3 hours ago