மெசஞ்சர் செயலியில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்த செயலி மூலம் தொடர்ந்து தவறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துகொண்டே வந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொதுத் தேர்தல்களை நடத்தத் தயாராகி வருவதால், தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் அதிகளவில் பரவும் நிலையில், இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், வாட்ஸ்அப் செயலியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றே, பேஸ்புக் மெசஞ்சரிலும் அறிமுகப்படுத்த போவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது. அது, ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என தெரிவித்தது.
இந்த புதிய வசதி, கொரோனா பற்றிய தவறான தகவல் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதாகவும், வாட்ஸ் ஆப் செயலியில் விதிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை பயனர்களிடமிருந்து பெரியளவில் எதிர்ப்புகளை பெறவில்லை. இந்த நிலையில், இந்த புதிய விதிகளை பேஸ்புக் நிறுவனம், தனது மற்ற செயலிகளிலும் அமல்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியானது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…