மும்மொழிக் கொள்கையை பாஜக கனவில் கூட நினைக்க கூடாது – ஸ்டாலின் எச்சரிக்கை!

Default Image

இரு மொழிக்கொள்கை என்ற தேன் கூட்டில் கல் வீசி மும்மொழிக் கொள்கையை கொண்டுவர மத்திய பாஜக அரசு கனவிலும் நினைக்க கூடாது என்று திமுக தலைவர் மு. கஸ்டாலின் தெரிவித்துள்ளார் .மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவது பேரிடரை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள அவர் இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் பரிந்துரையை உடனே மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக் கலப்படத்தை யார் செலுத்த முயன்றாலும் சகித்துக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.மேலும்,பாஜக தமிழக அரசை மிரட்டி இந்தி திணிப்பை நிறைவேற்ற துடிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்