திருவாரூர் இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு…!!

Default Image

திருவாரூர் இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் யார் என இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருவாரூர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இரண்டு பேர் மனுதாக்கல் செய்தனர். வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுக்களை திரும்ப பெற வரும் 14ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 31ம் தேதி நடைபெறவுள்ளது. இன்று, முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரும் தேர்தல் என்பதால், இடைத்தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்