திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனை ஜன.4-ம் தேதி நடைபெறும்…. அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு…!!

Default Image

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனை ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க விரும்புபவர்கள், நாளை காலை 9.30 மணி முதல், 3ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, வரும் 3ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4ஆம் தேதி மாலை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்