வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடு ரத்து.! டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு.!

Default Image

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடு ரத்து என அறிவிவிக்கப்ட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 6 ம் தேதி டிரம்ப் அரசு வெளியிட்ட புதிய விசா உத்தரவுப்படி, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக் கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.சமீபத்தில்,  விசா முடிவுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு அல்லது நிரந்தர தடை விதிக்க கோரி ஹார்வர்டு பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனமும் பாஸ்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

 நேற்று  இந்த வழக்கு தொடர்ப்பானவிசாரணை  நடைபெற்றது அப்போது, அமெரிக்க அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அமெரிக்க குடியுரிமை துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட விசா தொடர்பான ஆணை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் 17 அமெரிக்க மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்