நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு.
முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் பல நாடுகள், தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி கண்டறிய பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என பல நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ரேபிட் கிட் கருவிகள் மூலம் அரை மணி நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றாலும், இந்த கருவிகளுக்கு உலகம் முழுவதும் காத்திருந்து பெற வேண்டிய நிலை ஏற்படுள்ளது.
இந்நிலையில் பிரிட்டன் துர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் வெப்பமண்டல மருந்துக்கான லண்டன் கல்வி மையத்துடன் அறக்கட்டளை அமைப்பு ஒன்று இணைந்து, நாய்களின் மோப்பத்திறன் மூலம் கொரோனா வைரஸை கண்டறிய முடியுமா என ஆய்வு தொடங்கியுள்ளது.
ஏற்கனவே மலெரியா குறித்த ஆய்வில், நாய்களின் மோப்பத்திறன் உதவியது. அது போல கோவிட் 19-க்கும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு சாத்தியமானால் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்றை வேகமாக கண்டறிய முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
அதன்மூலம் யாரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், யாருக்கு கூடுதல் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் விரைவாக அடையலாம் காணலாம் என்கின்றனர். மேலும் பாக்டீரியா மற்றும் இதர நோய்களை அறியும் திறன் நாய்க்கு உள்ளதற்கு ஆதாரம் இருப்பதாகவும், கொரோனா பரவலை வராமல் தடுப்பதிலும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கலாம் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…