நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? – பிரிட்டனில் ஆய்வு

Published by
லீனா

நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு.

முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் பல நாடுகள், தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி கண்டறிய பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என பல நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ரேபிட் கிட்  கருவிகள் மூலம் அரை மணி நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றாலும், இந்த கருவிகளுக்கு உலகம் முழுவதும் காத்திருந்து பெற வேண்டிய நிலை ஏற்படுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் துர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் வெப்பமண்டல மருந்துக்கான லண்டன் கல்வி மையத்துடன் அறக்கட்டளை அமைப்பு ஒன்று இணைந்து, நாய்களின் மோப்பத்திறன் மூலம் கொரோனா வைரஸை கண்டறிய முடியுமா என ஆய்வு தொடங்கியுள்ளது.

ஏற்கனவே  மலெரியா குறித்த ஆய்வில், நாய்களின் மோப்பத்திறன் உதவியது. அது போல கோவிட் 19-க்கும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு சாத்தியமானால் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்றை வேகமாக கண்டறிய முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

அதன்மூலம் யாரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், யாருக்கு கூடுதல் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் விரைவாக அடையலாம் காணலாம் என்கின்றனர். மேலும் பாக்டீரியா மற்றும் இதர நோய்களை அறியும் திறன் நாய்க்கு உள்ளதற்கு ஆதாரம் இருப்பதாகவும், கொரோனா பரவலை வராமல் தடுப்பதிலும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கலாம் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

11 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

12 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

12 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

13 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

14 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

16 hours ago