என்னால் இனி நடக்க முடியுமா? நடிக்க முடியுமா? பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், அறுவை சிகிச்சை செய்துகொண்டு நடக்க முடியாத நிலைமையில் இருந்தார். இதனை அவர் தனது இணைய பக்கத்திலும் வெளியிட்டார்.
தற்போது இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “என்னால் இனி நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, முக்கியமாக நடனம் ஆட முடியுமா என்று என் கேள்விகள் இருந்தது. என்னால் முடியாது என்று தான் என் மனதில் பதில் இருந்தது.
ஆனால் என் FIR பட இயக்குனர் மனு ஆனந்த் தான் என்னை ஊக்கப்படுத்தினார். அவர் என் மீது நம்பிக்கைகாகவே நான் bedல் இருந்து எழுந்து படிப்படியாக நடக்க ஆரம்பித்தேன். நான் மீண்டும் ஷூட்டிங் போன போது நன்றாக பார்த்துக்கொண்டனர். தற்போது 100 சதவீதம் குணமடைந்துவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.
— Manjima Mohan (@mohan_manjima) January 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025