காற்று மூலம் கொரோனா நோய் தொற்று பரவுமா? ஆதாரங்களுடன் விளக்கும் விஞ்ஞானிகள்!

Published by
Surya

கொரோனா வைரஸின் தாக்கம் காற்று மூலமாக பரவும் எனவும், அதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் 1.15 கோடி மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று, மூக்கு அல்லது வாய் மூலம் சிறிய துளிகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. அதாவது, மக்கள் தும்மும்போது, இருமும்போது அல்லது பேசும்போது இந்த தொற்று பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக, முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளி பின்பற்றுவது, போன்றபல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.  இந்நிலையில், இந்த கொரோனா தொற்று, காற்றின் சிறிய துகள்களில் உள்ள கொரோனா வைரஸ்,  மக்களை பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், காற்று மூலம் கொரோனா பரவும் ஆதாரங்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து 32 நாடுகளில் 239 விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வில் காற்றில் சிறிய துகள்கள் மூலம் மக்களை கொரோனா பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டும் ஆதாரங்களை கோடிட்டுக் காட்டியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டது.

மேலும், காற்று மூலம் கொரோனா பரவுகிறது என கூறியதற்கு உலக சுகாதார அமைப்பு உடனடியாக பதிலளிக்கவில்லை எனவும் அந்த செய்தி தொகுப்பில் தெரிவித்தது. கொரோனா அறிகுறியுடன் உள்ள நோயாளி ஒருவர் துமிய பிறகு, வரும் நீர்த்துளிகள், காற்று மூலம் பரவுகிறது. இதனால் கொரோனா வைரஸ் காற்று வழியாகப் பரவுகிறது என தெரிவித்து வருகின்றன.

Coronavirus Outbreak: Not just while coughing or sneezing ...

அந்த காற்றை உள்ளிழுக்கும்போது மக்களை பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று கற்று மூலம் பரவுவதற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில், கொரோனா பரவுதலை  முடிந்தவரை நாங்கள் கருதுகிறோம். ஆனால் தெளிவான ஆதாரங்களால் நிச்சயமாக ஆதரிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்ப முன்னணி டாக்டர் பெனடெட்டா அலெக்ரான்ஸி தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.

Published by
Surya

Recent Posts

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

29 minutes ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

40 minutes ago

SRH vs GT: அலறவிட்ட சப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

53 minutes ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

1 hour ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

2 hours ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

14 hours ago