ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனாங்களா .?ஷிவானியிடம் கண்ணீர் விட்டு பேசும் பாலாஜி.!

Default Image

தனக்கு மெண்டல் பிளாக் இருப்பதாக கூறி போது ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனார்களா என்று ஷிவானியிடம் கண்ணீர் விட்டு பேசுகிறார் பாலாஜி.

கடந்த சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அனைவரையும் பல கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்து விட்டார் .குறிப்பாக பாலாஜியிடம் சனமிடம் செருப்பு காட்டியதும் குறித்தும் , கேப்டன்சி டாஸ்க்கில் பாலாஜி தான் செய்யவில்லை என்று கூறியதை குறும்படம் போட்டு புரிய வைத்ததுடன் பாலாஜிக்கு மெண்டல்பிளாக் இருப்பதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து ஷிவானியிடம் கண்ணீருடன் பேசுகிறார்.தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில்,எனக்கு மெண்டல் பிளாக் இருக்கிறது என்று கமல் சார் கூறிய போது அனைவரும் கேட்டு கொண்டு தானே இருந்தீர்கள் .யாராவது எழுந்து அவர் விளையாடியது எங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னார்களா . அந்த இடத்தில் நான் எவ்வளவு அதிகப்பிரசங்கித்தனமாக தெரிந்திருப்பேன்.ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனார்களா ,மனசு எவ்வளவு குத்தி கொண்டு இருக்கிறது .என்னால் ஞாயிறன்று நிகழ்ந்த நிகழ்விலிருந்து மீள முடியவில்லை என்று கூறி ஷிவானியிடம் கண்ணீருடன் பேசுகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்