இத்தாலியின் வடக்கு மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய கேபிள் கார் நேற்று விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி நாட்டின் வடக்கே உள்ள பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா எனப்படுகிற கிராமத்தில் உள்ள மோகியோர் எனும் ஏரியிலிருந்து மோட்டரோன் என்ற மலைக்குன்று பகுதிக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் கேபிள் கார் வசதியை உபயோகித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவ்வழியாக செல்வதற்கும் கேபிள் காரில் பயணிப்பதற்கு அப்பகுதியில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த கேபிள் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நேற்று இந்த கேபிள் கார் 985 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இது விபத்தில் சிக்கி உள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு துரின் நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து மீட்பு பணியினர் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் தற்பொழுது பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…