டிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் பைட்டான்ஸ்…?

Default Image

மைக்ரோசாப்ட் டிக்டாக்கின் உலக செயல்பாடுகளை வாங்க பரிசீலித்து வரும் நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன், பைட்டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கடந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கின என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் குழு இந்த சந்தர்ப்பத்தில் டிக்டாக்கில் முதலீடு செய்வது பயனுள்ளது என்பதை பரிசீலித்து வருகிறது. மேலும், தற்போது டிக்டாக்கில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் இழப்பை மதிப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் டிக்டாக் ஜூன் மாத இறுதியில் தடைசெய்யப்படுவதற்கு முன்னர் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுஇருந்தது. இதன் மதிப்பு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கேட்டபோது, ​​இந்த செய்தி முற்றிலும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டாக் மற்றும் விசாட் போன்றசெயலிகளை தடைசெய்யும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இந்த தடை 45 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது என்று கடந்த டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்ட தனது இரண்டு தனி நிர்வாக உத்தரவுகளில் தெரிவித்தார். இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்துள்ளார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்