பாகிஸ்தானில் பிரேக் பிடிக்காமல் ஓடிய பேருந்து விபத்திற்குள்ளானது 26 பேர் பலி !

Default Image

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி  என்ற இடத்தை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த பேருந்து சிலாஸ் எனும் இடத்தை அடைந்தவுடன் பேருந்தில்  பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது . பின்பு  பேருந்து மலையில் மோதி விபத்திற்குள்ளானது.

அந்த பேருந்தில் பயணித்த 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்த 16 பேரை மீட்டு ஆம்புனஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். மேலும் உயிரிழந்த 26 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கடுமையான விசாரணை நடித்து வருகிறார்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்