பிரிட்டன் அரண்மனைக்குள்ளும் நுழைந்த கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Default Image

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை அண்மையில் நடத்தப்பட்டது. அதில், 71 வயதான இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிரிட்டன் அரண்மனை அறிவித்துள்ளது. தற்போது அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ஏற்கனவே லண்டனில் போக்குவரத்து முடக்கப்பட்டு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வரையறுக்கப்பட்டும், பிரிட்டன் அரண்மனையில் அதிலும் இளவரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இளவரசர் மனைவிக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதிக்கபட்டது. அதில் முதற்கட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்