#Breaking: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை.. 2-வது முறையாக ரத்து!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்கு பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முக்கியமான பயணம் என்று இப்பயணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல இந்தியாவின் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ளவிருந்தார். அப்பொழுது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது இரண்டாவது முறையாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை பயணம் ரத்து செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025