பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளம் பத்தாத காரணத்தினால் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்பொழுது 150,402 யூரோ (இந்திய மதிப்பின்படி1,30,21,014 ருபாய்) சம்பளம் வாங்குகிறார். அந்த சம்பளம், தனது முந்தைய பணியுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருப்பதாக பிரிட்டிஷ் செய்தி ஊடகம் தி டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில் தெரியவந்துள்ளது.
அந்த செய்தி தொகுப்பில், டோரி கட்சி எம்.பி. ஒருவர், பத்திரிகையில் மாதம் 23,000 யூரோ சம்பாதித்து வந்த போரிஸ் ஜான்சன், 6 மாதத்தில் அங்கிருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளனர். அவருக்கு 6 குழந்தைகள் உள்ளதாகவும், நிதி உதவி தேவைப்படும் அளவுக்கு இளைஞர்களாக உள்ளதாக தெரிவித்த அவர், போரிஸின் முன்னாள் மனைவி மெரினா வீலருக்கு விவாகரத்து ஒப்பந்தத்தின் பங்குகளை செலுத்த வேண்டியது இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், டோரி கட்சியின் தலைவராவதற்கு முன், அவர் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டுக்கு 275,000 யூரோ சம்பளம் பெற்று வந்ததாகவும், அவர் எழுதும் இரண்டு உரைகளை வழங்குவதிலிருந்து மாதத்திற்கு 1,60,000 யூரோகளை தனியாக சம்பாதிப்பார் என அந்த செய்திதொகுப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு சம்பளம் பத்தாத காரணத்தினால், தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டே வருகிறது
பிரதமர் பதிவில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினால், அவருக்கு பதில் இந்திய வம்சாவளியான இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக் பிரதமராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…