ரஷ்யா மீது விதிக்கப்ட்டுள்ள பொருளாதார தடைக்கு சம்மதம் தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு.
உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார உள்ளிட்ட தடைகளை விதிக்க தயார் என்று ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரிட்டனின் நட்பு நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவெடுத்துள்ளன என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கின்றன. ஏற்கனவே அமெரிக்க, ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருந்தது. பிரிட்டனும் இதுபோன்று தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது ரஷ்யா மீது விதிக்கப்ட்டுள்ள பொருளாதார தடைக்கு சம்மதம் தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார்.
இதேபோல், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நேட்டோ அமைப்பில் இருக்கக்கூடிய நாடுகள் அனைத்துமே உக்ரைனுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், தற்போதுவரையில் உக்ரைனுக்கு படைகளை நேரடியாக அனுப்புவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…