மகாலட்சுமியின் அருள் எப்போதும் கிடைக்க இந்த செடியை வளருங்கள்..!

Default Image

வீட்டில் துளசி செடியை கொண்டு வந்தால் லட்சுமிதேவியின் அருள் எப்போதும் இருக்கும்.

இன்று பெரும்பாலான வீடுகளில் துளசி செடி நடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாஸ்துவின் பார்வையில் துளசி செடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

சாஸ்திரங்களில், துளசி செடியை லக்ஷ்மியின் வடிவம் என்று கூறுகின்றனர். அதாவது துளசி இருக்கும் இடத்தில் எப்போதும் லட்சுமியின் வருகை இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இது ஒரு அற்புதமான மருத்துவ தாவரமாகும். துளசி செடியை வீட்டில் நடுவதன் மூலம் எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் பெருகும்.

துளசி செடி வீட்டில் வரும் பேரிடர்களைத் தடுப்பதுடன் நோய்களை அழிக்கும் நல்ல மருந்தாகவும், குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும் மங்களகரமானதாகவும் செயல்படுகிறது. வீட்டில் துளசி செடி இருந்தால் மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும், துளசி செடி வீட்டில் இருந்தால் எப்போதும் மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்து இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்