#Breaking:மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றது ஏன்? – பாதுகாப்பு செயலாளர் முக்கிய தகவல்!

Published by
Edison

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே அரசைக் கண்டித்து கடும் போராட்டம் நிலவி வரும் நிலையில்,நேற்று முன்தினம் தனது பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.பின்னர்,அவரது மாளிகையில் தங்கியிருந்தபோது, அரசுக்கு எதிரானவர்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர்.

மேலும்,அவரது மாளிகையின் உள்ளே நுழைய முயற்சியும் செய்த ஆர்பாட்டக்காரர்களால் நுழைய முடியவில்லை.இதனால்,அங்கிருந்து நேற்று அதிகாலை ராஜபக்சே வெளியேறி,தற்போது திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பியோட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது.இதனால்,அப்பகுதியில் ஆர்பாட்டக்கரார்கள் குவிந்து வருகின்றனர்.குறிப்பாக,ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட கூடாது என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்,மகிந்த ராஜபக்சேவை திருகோணமலைக்கு அழைத்து சென்றது குறித்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னே கூறியதாவது:”மகிந்த ராஜபக்சேவின் இல்லம் தாக்கப்பட்டதால் அவரை பாதுகாக்கவே திருகோணமலை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றோம்.இலங்கையில் நிலைமை சீரானதும்,மகிந்த ராஜபக்சே அவர் விரும்பும் இடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே,இலங்கை மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,தற்போது அதற்கு இலங்கை ராணுவத் தளபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும்,பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

Recent Posts

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு! 

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…

29 minutes ago

நாங்க வரல., முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! புறக்கணித்த கட்சிகள்..,

சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

11 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

13 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

14 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

14 hours ago