குடும்ப அரசியல், ஊழல் போன்ற குற்றசாட்டுகளில் ஆளாகியுள்ளதால் அந்த அரசில் நாங்கள் இணைய மாட்டோம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் பேட்டி.
இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு
அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக்கட்சி அரசில் இணையமாட்டோம்
இந்த நிலையில், இலங்கை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்துக்கட்சி அரசில் இணையமாட்டோம் என தெரிவித்துள்ளார். இக்கட்சியானது இலங்கை நாடாளுமன்றத்தில் 52 உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை; மக்களின் விருப்பத்தை எதிரொலிக்கும் கட்சியாக நாங்கள் இருக்கிறோம். குடும்ப அரசியல், ஊழல் போன்ற லகுற்றசாட்டுகளில் ஆளாகியுள்ளதால் அந்த அரசில் நாங்கள் இணைய மாட்டோம் என்றும், திவாலாகும் நிலைக்கு நாட்டை அழைத்து சென்ற அரசில் ஒருபோதும் இணைய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…