ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சோதனை வாக்கெடுப்பு தொடங்கிய நிலையில், இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. மனித உரிமை மன்றத்தில், 47 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த தீர்மானத்தில், 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தால், தீர்மானம் வெற்றிபெறும்.
சீனா, ரஷ்யா,பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகளின் தரவுடன் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்டும் என இலங்கை தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியா மற்றும் சீன பிரதமர்களிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே ஆதரவு கோரியிருந்தார். இதற்கிடடையில், இலங்கை வெளியுறவு துறை செயலாளர், இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா? அல்லது எதிராக வாக்களிக்குமா? என்ற கேள்வி எழுந்து வந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சோதனை வாக்கெடுப்பு தொடங்கிய நிலையில், இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…