#BREAKING: காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!!

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் மக்கள் குவிந்ததால், கூட்டத்தை கலைக்க துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசு படைக்களுக்கு, தலிபான் பயங்கரவாத படைகளுக்கு நீடித்து வந்த போர், ஆட்சியை கையப்பற்றிய பின் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்திருந்தனர்.

அந்நாடு முழுவதும் நேற்று தலிபான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சார்பில் ஏர் இந்தியா விமானம் மூலம் 120 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டன.

இன்றும் அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஆப்கானிஸ்தான் செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

27 minutes ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

57 minutes ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

1 hour ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

3 hours ago