#BREAKING: ஒரே அடியாக 17 நாடுகளை தூக்கியது ரஷ்யா!

Default Image

உக்ரைன் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பெயர், ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, நார்வே, தைவான், சான் மரினோ, சிங்கப்பூர், எஸ் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா.

இதனியையே, ரஷ்யா – உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் சந்திப்பு இன்னும் 2 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றும் ரஷ்ய தூதுக்குழு தற்போது பெலாரஸில் காத்திருப்பதாக ரஷ்ய ஊடகம் தகவல் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்