ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என அதிபர் புடின் பெருமிதம்.
உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் தலைநகரான கீவ் உள்ளிட்ட பகுதியில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதிகளை நோக்கி முன்னேறியிருந்தன. அந்த நிலையில் தான் மரியுபோல் நகர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்நகரில் உள்ள கட்டிடங்களை தரைமட்டமாக்கிய ரஷ்ய ராணுவம், உக்ரைன் வீரர்களை சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதன்பின் அந்நகரை கைப்பற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு புடின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…