உக்ரைனில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கிழக்கு பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. அதே சமயத்தில் ரஷ்ய நட்பு நாடான பெலாரசில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, மனிதாபிமான மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து உக்ரைனில் உள்ள இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதன்படி, இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் இருந்து உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்நோவாக்கா நகரங்ககளில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது இன்று 10வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வந்த நிலையில், அந்நாட்டு உள்ளூர் நேரப்படி, காலை 6 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…