பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என வருமான துறை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நேற்று முதல் நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் சொந்தமான அசல் ஆவணங்கள் அவரது நண்பர் வீட்டின் மறைவிடத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி ஆவணங்கள் வருமான வரித்துறை பறிமுதல் செய்தனர். மேலும் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என குறிப்பிடப்படுகிறது. சோதனைக்குள்ளான விநியோகஸ்தர் கட்டுமான தொழிலதிபரும் ஆவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு சம்பளம் அளிக்கப்பட்ட ரசீதுகள் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் நடிகர் விஜய் அசையா சொத்துக்களில் செய்த முதலீடு குறித்து சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை எந்தவொரு ஆவணங்களும் மற்றும் பணமும் பறிமுதல் செய்தாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…