case file [Imagesource Representative]
கோவை அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி, திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி இரவு அந்த மாணவர் தங்கி இருந்த விடுதியில் உள்ள 3,4 ஆம் ஆண்டு மாணவர்கள் அந்த மாணவரின் அறைக்கு சென்று மது குடிப்பதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், மாணவனை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கி, மொட்டை அடித்து அரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். அதனை வீடியோ எடுத்து வைத்து, மது அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனை அடுத்து அந்த மாணவர் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவனின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு படிக்கும் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 மாணவர்களை கைது செய்தனர். இந்த மாணவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராக்கிங் செயலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. மேலும் தலைமறைவான மாணவரை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…