இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாக்களை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார்.
இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார். அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில், ராஜினாமா ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்கெடுக்குமாறு திபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து கட்சிகளின் சார்பில் அமைச்சக பதவியை ஏற்று நெருக்கடியை தீர்க்க முன்வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சிகள் அடங்கிய காபந்து அரசை அமைக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இலங்கை அமைச்சரவையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகி இருக்கிறார்கள்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் ராஜினாமா கடிதத்தை அமைச்சர்கள் அனைவரும் அளித்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தனர். இலங்கையில் கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களோடு அதிபர் கோட்டாபய ராஜபக்சவை, பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில், அனைவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…