BREAKING: மக்கள் அமைதி காக்க வேண்டும் – அதிபர் கோட்டாபய ராஜபக்சே ட்வீட்

Published by
பாலா கலியமூர்த்தி

வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிபர் ட்வீட்.

இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே காரணம், இதனால் கோட்டாபய அரசு மற்றும் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி கடும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர் மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளதால், சில இடங்களில் துப்பாக்கிசூடு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் மக்கள் அமைதி காக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுல கோட்டாபய ராஜபக்சே, வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத் தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எஎடுக்கப்படும் என்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். கொழும்புவில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரவியதை தொடர்ந்து, அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

8 minutes ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

1 hour ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

2 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

2 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

3 hours ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

3 hours ago