#BREAKING: இலங்கையில் உள்ள இந்தியர்கள் பதிவு செய்ய உத்தரவு!

Default Image

இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.

இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தனித்தனியே இணையத்தில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு எரிபொருட்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு  தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சமயத்தில், இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்