#BREAKING: இலங்கை அதிபரை பதவி நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

Default Image

இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வரும் நிலையில் தீர்மானமும் தாக்கலாவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்திட்டார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான தீர்மானமும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானங்களுக்கு இலங்கையின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்