ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி& ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் ஏமன் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இன்று வடகொரியா சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகளை வீசியதாக தென்கொரியா கூறியிருந்தது. ஒருபுறம் தொடர்ந்து 4-ஆவது நாளாக உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மற்றொரு நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் அரங்கேறியுள்ளது என்பது அச்சுறுத்தலை உண்டாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கடந்த 48 மணி நேரத்தில் உக்ரேனில் மட்டும் அல்ல சீரியா, ஏமன், சோமாலியா என உலகின் பல பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…