#BREAKING: இலங்கையில் தேசிய விளையாட்டு கவுன்சில் பதவி விலகல்!

Default Image

பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் என தகவல்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் விளையாட்டு துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வரும் நிலையில், ஆளும் அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர்கள் சிலர் முன்பாக ராஜினாமா செய்திருந்தனர். ஆளும் அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடியும் அதிகரித்து வரும் நிலையில், அரசின் பல்வேறு தவறான முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்