#Breaking:பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்சே!

Published by
Edison

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த சூழலில்,இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், இலங்கை கொழும்புவில் நடைபெற்ற கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி அமரகீர்த்தி அத்துகோரலா உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் திடுக்கிடும் தகவலை நேற்று தெரிவித்தது. மேலும்,இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்து உள்ளதாகவும்,இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இவ்வாறு,இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக மக்கள் போரட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,மறுபக்கம் வன்முறையும், கலவரமும் பெரிதாக அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்த சில மணி நேரங்களிலேயே இலங்கையின் குருநாகலில் உள்ள அவரது இல்லம், தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,கொழும்புவில் உள்ள பிரதமருக்கான சொகுசு மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்சே வெளியேறியுள்ளார்.இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து வரும் நிலையில் பிரதமர் மாளிகையில் இருந்து கடும் பாதுகாப்பாக வெளியேறி அதன்பின்னர் மஹிந்த ராஜபக்சே வேறு வீட்டில் குடியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Recent Posts

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

1 hour ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

2 hours ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

2 hours ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

3 hours ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

4 hours ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

5 hours ago