#BREAKING: காபூலில் துப்பாக்கிச்சூடு…!

Default Image

ஆப்கானிஸ்தானின் காபூலில் சீன பிரஜைகள் அதிகம் வசிக்கும் ஹோட்டல் மீது கடுமையான தாக்குதல்கள்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனர்கள் அதிகம் சென்று வரும் ஹோட்டலை குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காபூலில் உள்ள சீன தேசிய ஹோட்டலில் இன்று நடந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாதி ஒருவர் காயமடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காபூல் நகரின் ஷாஹ்ரே நாவ் பகுதியில் உள்ள சீனர்களின் விருந்தினர் மாளிகை மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்