இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம்.
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கிறது. இந்த நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து உள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மக்களின் பாதுகாப்பிற்காகவே ராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார். ராணுவத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…