#BREAKING : எஸ்டோனியா மற்றும் லாட்வியா நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை..!

Default Image

எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது.

உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலில் 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளை பொறுத்தவரையில், உக்ரைன் தலைநகரான கீவ்-வை தாக்கி நெருங்கு வருகிறது. தலைநகரை பிடித்துவிட்டால் மொத்த நாட்டையும் கைப்பற்றிய சூழல் உருவாகும் என தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ரஷ்யாவின் இந்த செயலுக்கு கண்டன்னகள் வலுத்து வரும் நிலையில், எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, போலந்து செக் குடியரசு பல்கேரியா ஆகிய நாடுகள் ரஷ்யா விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளி பகுதியை பயன்படுத்த தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்