#Breaking:9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு – குடிசை மாற்று வாரியம்…!

Published by
Edison

9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் குடிசைமாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதித் துறை & நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.மேலும்,தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட முன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்கிறார்.

இந்நிலையில்,உலக வங்கி நிதியில் நெல்லை,மதுரை,தஞ்சாவூர், சிவகங்கை, தேனி,தென்காசி, திண்டுக்கல்,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரூ.950 கோடியில் மொத்தம் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக என்று சட்டப்பேரவையில் இன்று குடிசைமாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும்,வண்டலூர் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்.
  • கோயம்பேடு அங்காடி வளாகத்தில் தொழிலாளர்களுக்கான உணவகம்,தங்கும் விடுதி இரண்டு கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
  • சென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப் பகுதிகளில் 28,247 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • நகர ஏழை மற்றும் குடிசைப் பகுதி வாழ் குடும்பங்களுக்கு 9.53 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல,தொழிற்சாலை, சுகாதாரம், போக்குவரத்து , சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மாநிலத்திலுள்ள பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்க முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டம் உள்ளது என்றும்

சென்னை பெருநகரின் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் ( CUMIA ) அமைக்கப்பட்டுள்ளது என்றும் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…

1 hour ago

இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.!

சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

2 hours ago

WWT20 : ‘நாங்க சரியா விளையாடல’! தோல்வியை ஒத்துக்கொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன்!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…

2 hours ago

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

2 hours ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

2 hours ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

2 hours ago