#Breaking:தொடங்கியது…உக்ரைன் மீதான இரண்டாவது நாள் தாக்குதல்!

Default Image

இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைனில் நேற்று குண்டு மழைகளை பொழிந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய நிலையில்,உக்ரைன் ராணுவ வீரர்கள்,பொதுமக்கள் என 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்,ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில்,இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதே சமயம்,கீவ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் பாக சிதறல்களில் சிலவற்றை அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே,உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் சுரங்க அறைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்