ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை! அஜித் செய்த உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்!

bose venkat

சென்னை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காக செய்துகொடுத்து வருகிறார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஸ்ணு விஷால் மற்றும் அமீர்கான் இருவரும் தங்களுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த நிலையில் தங்களுக்கு உதவி வேண்டும் என்று விஷ்ணு விஷால் கேட்டிருந்தார்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து அதிரடியான நடவடிக்கையை எடுத்து. இந்த உதவிய செய்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு விஷ்ணு விஷால் தன்னுடைய நன்றியும்  தெரிவித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து இவர்களுக்கு உதவி தேவை என்ற தகவலை அறிந்த அஜித் உதவ ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்தது.

வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!

இதை பற்றி நடிகர் விஷ்ணு விஷால் “ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு, அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்கள் வில்லாவில் உள்ள சக உறுப்பினர்களுக்கான பயண ஏற்பாடுகள் செய்ய உதவினார்” என்று கூறியிருந்தார். அமீர், அஜித், விஷ்ணு விஷால் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது.

பிரபலங்களின் குரலை கேட்டு உதவி செய்த அஜித் ஏழை மக்களுக்கும் உதவி செய்யலாமே என்பது போல போஸ் வெங்கட் அஜித் செய்த உதவி பற்றி விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.

(உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)” என போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin