உள்நாட்டு இரு சக்கர வாகன மின்சார வாகன உற்பத்தியாளர் ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது பிரபலமான பைக் ஆர்.வி 400 ஐ மீண்டும் முன்பதிவுகளை செய்ய உள்ளது. இந்த மின்சார பைக்கின் இரண்டாவது தொகுதிக்கான முன்பதிவுகளை ஜூலை 15 முதல் நண்பகல் 12 மணிக்கு நிறுவனம் மீண்டும் திறக்க உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் தற்போது வரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
கடந்த மாதத்தில், டெல்லி, மும்பை, புனே, சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆர்.வி 400 மற்றும் ஆர்.வி 300 முன்பதிவு செய்யத் தொடங்கியது. அதிக தேவை காரணமாக முன்பதிவை மூட வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியிருந்தது.
விற்பனை மற்றும் சர்வீஸ் மையத்தை நாட்டின் 35 நகரங்களில் விரிவுபடுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக முன்பதிவு செய்யப்பட்ட மின்சார பைக்கின் விநியோகங்கள் செப்டம்பர் 2021 இல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RV300 1.5 கிலோவாட் மோட்டார் மற்றும் 2.7 கிலோவாட் பேட்டரி உள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 65 கி.மீ வேகத்தில் செல்லும். ரெவோல்ட் ஆர்.வி 300 எலக்ட்ரிக் பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 முதல் 150 கிலோமீட்டர் வரை இயங்கும். இந்த பைக்கில் சிபிஎஸ் பிரேக்குகள், முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 180 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளன. இந்த பைக் ஸ்மோக்கி கிரே மற்றும் நியான் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது.
ஆர்.வி 400 எலக்ட்ரிக் பைக்கில் 3 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.24 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. ரெவோல்ட் ஆர்.வி 400 எலக்ட்ரிக் பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை இயங்கும். அதே நேரத்தில், மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது வழக்கமான 15 ஆம்ப் பிளக் பாயிண்டில் சார்ஜ் செய்யப்படலாம் மற்றும் சிறப்பு சார்ஜிங் உள்கட்டமைப்பு தேவையில்லை.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…