ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்சில் உள்ள பிரபலமான ஈபிள் டவரில் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காவல்துறையினருக்கு வந்த தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈபிள் டவரின் கீழே வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்ட அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில், ஈபிள் டவரில் தீவிர நடவடிக்கைளில் ஈடுபட்டு வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸ் தெரிவித்தார். இதன் பின் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பு, ஈபிள் கோபுரத்தை ஒரு நாளைக்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …