தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பல கோடிகளையும் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் உடனடியாக, நீலாங்கரையில் உள்ள விஜயின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றோரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் அவரது தாயார் சோபா பெயரில் இருக்கும் அவரது திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பின் இது வதந்தி என்று தெரியவந்தவுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் தெரியவந்துள்ளது. பின் மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் என்ணை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடித்து, போலீசார் அவரை விசாரணை செய்து வருகின்றனர். அவர் போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…