ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கோர் மாகாணத்தில் (Ghor) உள்ள போலீஸ் தலைமையகம் மற்றும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கார் வெடித்துள்ளது. இந்த சம்பவம் காலை 11 மணிக்கு நடந்தது என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து வந்த காட்சிகள் இடிபாடுகளாகக் குறைக்கப்பட்டிருந்தன மற்றும் அப்பகுதியில் உள்ள பிற கட்டிடங்கள் ஓரளவு சேதமடைந்துள்ளன.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ படைகள் தலிபான்களை ஒழிக்க ஆப்கான் படைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் அதனை முடிவு கொண்டு வரும் விதமாக தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஆப்கான் அரசின் உதவியோடு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி மற்ற நாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என்று தலிபான்கள் தெரிவித்தனர். எனவே தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானின் அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.
தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…