ஆப்கானிஸ்தான் காபூலில் வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

Default Image

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 30 நிமிடங்களில் நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென அமெரிக்க – தலிபான்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் ஆங்காங்கு வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று காலை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் வெடிவிபத்து காலை 8 மணியளவில் காபூலில் மேற்கிலுள்ள தாருலமன் சாலையில் நிகழ்ந்துள்ளது. அடுத்ததாக 8.15 மணி அளவில் கார்ட்-இ-பர்வான் எனும் பகுதியில் நடைபற்றுள்ளது. இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த இருவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price
Ilaiyaraaja Symphony
virat kohli about aus