பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் குண்டு வெடிப்பு…! 7 பேர் பலி..! 50-க்கு மேற்பட்டோர் காயம்…!

Published by
லீனா

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், வணிக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து, டாக்கா பெருநகர காவல்துறை கமிஷினர் ஷபிகுல் இஸ்லாம் கூறுகையில், இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் நடைபெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், இந்த சம்பவத்திற்கான சரியான கரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்களில் 29 பேர் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 10 பேர் ஷேக் ஹசீனா தேசிய தீக்காயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்ற காயமடைந்தவர்கள் மக்பஜார் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதோடு, 2 பேருந்துகளும் சேதமடைந்துள்ளன.

Published by
லீனா

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

3 mins ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

20 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

21 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

32 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago