பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் குண்டு வெடிப்பு…! 7 பேர் பலி..! 50-க்கு மேற்பட்டோர் காயம்…!

Default Image

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், வணிக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து, டாக்கா பெருநகர காவல்துறை கமிஷினர் ஷபிகுல் இஸ்லாம் கூறுகையில், இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் நடைபெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், இந்த சம்பவத்திற்கான சரியான கரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்களில் 29 பேர் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 10 பேர் ஷேக் ஹசீனா தேசிய தீக்காயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்ற காயமடைந்தவர்கள் மக்பஜார் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதோடு, 2 பேருந்துகளும் சேதமடைந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்