விமானம் மூலம் ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்.!

Published by
Ragi

1000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 6 விமானங்களை ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் பலரும் நடந்து சென்றும் வருகின்றனர். வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பல பிரபலங்கள் இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி மும்பையில் சிக்கி தவித்த 200 தமிழர்களை தமிழகத்திற்கு செல்ல வழி வகுத்து கொடுத்தார்.இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு செல்ல உதவியுள்ளார். ஆம் மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், அலகாபாத் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்கு தலா இரண்டு விமானங்கள் வீதம் ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அமிதாப் பச்சனின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

4 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

6 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

6 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

7 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

8 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

9 hours ago