ஊரடங்கில் சல்மான்கான் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் சல்மான்கான்.இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக பலர் தங்களது நேரத்தை பல வகைகளில் கழித்து வருகின்றனர். சல்மான்கான் தனது ஊரடங்கு காலத்தை பன்வெல் பண்ணை வீட்டில் கழித்து வருகிறார். அதன் அருகிலுள்ள கிராமத்தில் குதிரைகளுடன் சவாரி செய்வதும், அங்கு விவசாயிகளுடன் இணைந்து பல வேலைகளை செய்தும் நேரத்தை செலவிட்டு வருகிறார். .
சமீபத்தில் கூட வயலில் இறங்கி டிராக்டரை ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயலில் நாற்று நடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சல்மான்கான் காதலி என்று கிசுகிசுக்கப்படும் யூலியா மற்றும் ஒரு சிலருடன் இணைந்து வயலில் நெல் நடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் கூட அவரது காதலி என்று கிசுகிசுக்கப்படும் லூலியா அவர்களும் வயலில் நாற்று நடும் அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…