அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதியின் உடல் இறுதி ஊர்வலம்!

Published by
Sulai
  • அமெரிக்காவின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதி உடல் இறுதி ஊர்வலம் சென்றுள்ளது.இந்த ஊர்வலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர்.
  • ஈரானிய தளபதியின் உடல் அவரது சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என்று ஈரானிய தூதர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தூதரகத்தை ஈரான் படை வீரர்கள் தாக்கியதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் ,ஈரான் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க படைகள் தயாராக இருக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நடத்திய தாக்குதலில் ஈரானின் தளபதி ஜெனரல் சுலைமானி மற்றும் அபு மஹ்தி அல் முஹாண்டிஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொல்லப்பட்ட இருவரின் இறுதி ஊர்வலம் ஈராக்கிய நகரமான காஸ்மெனியில் சனிக்கிழமை காலை தொடங்கியது.இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஈராக்கிற்கான ஈரானிய தூதர் மஸ்ஜெடி கூறுகையில் தியாகிகளின் துக்க அனுசரிப்பை நடத்த காஸ்மெயினில் உள்ள ஷியா இமாம்களின் புனித ஆலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் இறுதி ஊர்வலத்திற்கு பின்னர் ஈராக் தலைநகரான பாக்தாதிற்கு சடலங்கள் கொண்டு செல்லப்படும் என்றும் தளபதி சுலைமானியின் உடல் திங்களன்று ஈரானுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago
”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago