அமெரிக்காவின் தூதரகத்தை ஈரான் படை வீரர்கள் தாக்கியதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் ,ஈரான் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க படைகள் தயாராக இருக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நடத்திய தாக்குதலில் ஈரானின் தளபதி ஜெனரல் சுலைமானி மற்றும் அபு மஹ்தி அல் முஹாண்டிஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கொல்லப்பட்ட இருவரின் இறுதி ஊர்வலம் ஈராக்கிய நகரமான காஸ்மெனியில் சனிக்கிழமை காலை தொடங்கியது.இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் ஈராக்கிற்கான ஈரானிய தூதர் மஸ்ஜெடி கூறுகையில் தியாகிகளின் துக்க அனுசரிப்பை நடத்த காஸ்மெயினில் உள்ள ஷியா இமாம்களின் புனித ஆலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் இறுதி ஊர்வலத்திற்கு பின்னர் ஈராக் தலைநகரான பாக்தாதிற்கு சடலங்கள் கொண்டு செல்லப்படும் என்றும் தளபதி சுலைமானியின் உடல் திங்களன்று ஈரானுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…