விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மியான்மர் கவிஞர் – உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் திரும்பிய உடல்!

Published by
Rebekal

தடுப்புக்காவலில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மியான்மர் கவிஞர் கெத் தி அவர்களின் உடல், உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

மியான்மரில் ஜனநாயக ரீதியான ஆட்சி கலைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரவோடு இரவாக ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து மியான்மரில் ராணுவத்தினரின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக மியான்மரில் உள்ள கெத் தி எனும் கவிஞர் அவர்கள் “தலையில் சுடுகிறார்கள், ஆனால் புரட்சி இதயத்தில் இருக்கிறது” என அதிகம் பேசப்பட்ட கவிதையை இயற்றிய கவிஞர் அவர்கள் ஆளும் ராணுவ ஆட்சிக்கு எதிரானவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், கவிஞர் கெத் தி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விசாரிப்பதற்காக மியான்மரில் உள்ள ஆயுதமேந்திய இரு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் வந்து அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்பதாக கவிஞர் உள்ளுறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சடலமாக அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து கவிஞரின் மனைவி கூறுகையில், சனிக்கிழமை இரவு எனது நாங்கள் இருவருமே விசாரணை க்காக அழைக்கப்பட்டோம். நான் விசாரிக்கப்பட்ட பொழுது எனது கணவரும் இருந்ததார். பின் அவர் விசாரணை மையத்தில் இருப்பதாக என்னிடம் கூறினார்கள், நான் வெளியில் அனுப்பப்பட்டேன்.

ஆனால், எனது கணவர் திரும்பி வரவில்லை. மாறாக அவரை ஒரு மருத்துவமனையில் சென்று பார்க்குமாறு அவர்கள் சொன்னார்கள். நான் அவருக்கு ஒரு கை அல்லது கால் ஏதேனும் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் வந்து பார்க்கும் பொழுது அவர் சவக்கிடங்கில் இருந்தார். அவரது உள் உறுப்புகளும் அகற்றப்பட்டு இருந்தது என மிக வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் தனது கணவரை இராணுவத்தினரே அடக்கம் செய்ய திட்டமிட்டதாகவும், எனது கணவரின் உடலையாவது என்னிடம் தாருங்கள் என எனது கணவரின் உடலுக்காக நான் கெஞ்சினேன் எனவும் கூறியுள்ளார். அதன்பின் பதாக தான் எனக்கு தெரிந்தது எனது கணவர் விசாரணை மையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

47 seconds ago
“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

23 minutes ago
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

1 hour ago
ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

2 hours ago
விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

2 hours ago
“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

3 hours ago